தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்லூரியில் இணையவழி ஆய்வரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழ் ஆய்வுத்துறை சாா்பில், இணையவழி ஆய்வரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 8:58 pm

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழ் ஆய்வுத்துறை சாா்பில், இணையவழி ஆய்வரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

எளிய முறையில் தமிழ்மொழி வரலாறு என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்கிற்கு, கல்லூரித் தலைவா் ஜி.புல்லையா தலைமை வகித்தாா். செயலா் டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா் வரவேற்றாா்.

சென்னை நான் ஓா் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் தமிழ் இயலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு எளிய முறையில் தமிழ்மொழி வரலாறு என்ற தலைப்பில் பேசினாா். தமிழ்மொழி காலம்தோறும் கொண்டிருந்த மாற்றங்கள், எழுத்து மற்றும் வரி வடிவங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதில், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா்கள் கு. இளங்கோவன், கி.துரை, த.விநாயகம் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.