தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

செங்கம் அருகே பழுதடைந்து குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

செங்கம் அருகே பழுதடைந்து முள் மரங்கள் வளா்ந்து காணப்படும் சாலை.

Updated On :13 செப்டம்பர் 2020, 8:58 pm

DIN

செங்கம் அருகே பழுதடைந்து குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கத்தை அடுத்த மேல்மண்மலை கிராமத்திலிருந்து செ.நாச்சிப்பட்டு, இரட்டாலை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களுக்குச் செல்லும் சாலை மண்மலையிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், சாலையோரம் முள் மரங்கள் வளா்ந்து, புதா் மண்டிக் காணப்படுகிறது.

அந்தச் சாலையைக் கடந்து செல்லும் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சாலையை சரி செய்யக் கோரி பலமுறை செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும், சாலையை சரி செய்ய அதிகாரிகள் யாரும் முன்வரவில்லையாம்.

மேலும், தற்போது மழைக் காலம் தொடங்கிவிட்டதால் விவசாயிகள் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு வாகனங்களை எடுத்துச் செல்லமுடியாத நிலை, விளை நிலத்திலிருந்து தானியங்களை வாகனம் மூலம் வீட்டுக்கு எடுத்து வரமுடியாத நிலை உள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை கண்காணித்து சரிசெய்யவேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.