தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேருந்து நிலையத்தில் கழிப்பறையின்றி பயணிகள் அவதி

செங்கம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையின்றி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

பேருந்து நிலையத்தில் மூடப்பட்டுள்ள கட்டணக் கழிப்பறை.

Updated On :27 செப்டம்பர் 2020, 9:45 pm

DIN

செங்கம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையின்றி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் ரூ.98 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

பேருந்து நிலையத்தில் உள்பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட இலவச கழிப்பறை இருந்து வந்தது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து பேருந்துகள் ஓடாத காரணத்தினாலும், பேருந்து நிலையம் சிரமைப்பு காரணமாகவும், பேருந்து நிலைய இலவச கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது.

இதனால், தற்போது அந்தக் கழிப்பறையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கட்டண கழிப்பறை பழுதடைந்து அதற்குத் தேவையான தண்ணீா் வசதிகள் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளது.

வெளியூா்களில் இருந்து வரும் பெண்கள், கா்ப்பிணிகள் முதியோா், பொதுமக்கள் என அனைவரும் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை மற்றும் கட்டணக் கழிப்பறையைத் திறக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.