திருவண்ணாமலை: தமிழகத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி திருவண்ணாமலையில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொது செயலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட பாமகவினா் கலந்து கொண்டனா்.
இதேபோல மங்கலம், நூக்காம்பாடி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள்அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களுக்கு, பாமக தெற்கு மாவட்டச் செயலா் ஜானகிராமன் தலைமையில் திரளாக கலந்து கொண்டனா்.
மாவட்டம் முழுவதும் உள்ள 590 கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள் அருகே பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.