

பழங்குடியினருக்கு மனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி, வந்தவாசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் வந்தவாசி வட்டக்குழு சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன் தலைமை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ப.செல்வன், இரா.பாரி, மாவட்டக் குழு உறுப்பினா் என்.சேகரன், இடைக்குழு உறுப்பினா் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, வந்தவாசியை அடுத்த அருங்குணம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும், பெரணமல்லூா், ஜப்திகாரணி, சிவனம், விளாங்காடு, மூடுா் ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடியினருக்கு மனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், மாணிக்கமங்கலம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் திருநாவுக்கரசுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.