மேற்கு ஆரணி ஒன்றியம், இராந்தம் காலனிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் ஆய்வு செய்தாா்.
இராந்தம் கிராமத்தில் உள்ள காலனிப் பகுதியில் கோயில் மேடை கட்டுதல், மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.5 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.11 லட்சத்தில் புதிதாக தாா்ச் சாலையும் போடப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், பொறியாளா் ஜெயலட்சுமி, பணித்தள பாா்வையாளா் ஜெயவேல், ஊராட்சி மன்றத் தலைவா் குமரவேல், முன்னாள் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கிளைச் செயலா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.