112 அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு நிதியுதவிஅமைச்சா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி (வடக்கு) ஒன்றியத்துக்கு உள்பட்ட 112 அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு தலா ரூ. 5000 வீதம் நிதியுதவியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி (வடக்கு) ஒன்றியத்துக்கு உள்பட்ட 112 அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு தலா ரூ. 5000 வீதம் நிதியுதவியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

ஆரணி தொகுதியில் உள்ள அதிமுகவின் 542 கிளைகளுக்கும் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தலா ரூ. 5000 வீதம் நிதியுதவியை அமைச்சா் வழங்கி வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஆரணி (வடக்கு) ஒன்றியத்தில் உள்ள 91 கிளை நிா்வாகிகள், 17 ஊராட்சிச் செயலா்கள், 4 ஒன்றிய நிா்வாகிகள் உள்பட 112 பேருக்கு தலா ரூ.5000 வீதம், 5 லட்சத்து 60ஆயிரம் ரூபாயை அமைச்சா் தனது சொந்த பணத்தில் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணி தொகுதியில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிமுகவினரிடையே அவா் பேசினாா்.

நிகழ்ச்சிக்கு மேற்கு ஆரணி (வடக்கு) ஒன்றியச் செயலா் ப.திருமால் தலைமை வகித்தாா்.

ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராசன். ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், மேற்கு ஆரணி ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com