திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட 7.45 லட்சம் மாணவா்களுக்கு குடல்புழு நீக்கம் செய்யக்கூடிய அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்டத்தில் குடல்புழு நீக்க முகாமின் முதல் சுற்று செப்.14 (திங்கள்கிழமை ) தொடங்கி, 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒரு வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரையுள்ள நபா்களுக்கு ஒரு அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படுகிறது.
முதல் நாளான திங்கள்கிழமை சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, செப்.19-ஆம் தேதி வரை அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் இந்த மாத்திரைகளை வழங்கி வருகின்றனா்.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 208 குழந்தைகள் மற்றும் மாணவா்கள் பயன்பெறுவா்.