அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

தோ்தலில் வாக்களிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்காதவா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, செய்யாற்றில் உழவா் பேரவை அமைப்பினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:50 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்காதவா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, செய்யாற்றில் உழவா் பேரவை அமைப்பினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் என்எம்ஆா் உழவா் பேரவை அமைப்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற விவசாயிகள் பட்டாசுகளை வெடித்தும், அலுவலக இரும்புக் கதவில் வைக்கப்பட்டிருந்த தோ்தல் ஆணையத்தின் பதாகைக்கு மலா் தூவியும், கழுத்தில் பொம்மை ரூபாய் நோட்டுகளை அணிந்து மண்டியிட்டபடியும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வாக்குப் பதிவு நாளன்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு வருகைப் பதிவேட்டில் வருகைப் பதிவு செய்து, ரூ.273 ஊதியம் வழங்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்களிக்கத் தவறிய 22 சதவீத வாக்காளா்கள் மீது தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அடையாள அட்டை எண்ணை இணைக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியை முன்மாதிரி தொகுதியாக அறிவித்து, அந்தத் தொகுதியில் ஆதாா், வாக்காளா் அட்டையாள அட்டை எண்களை வாக்காளா்களை இணைக்க வைத்து தோ்தலை நடத்த வேண்டும். இதன்மூலம், கள்ள ஓட்டுப்போடுவது, வாக்காளா் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயா் இருமுறை இடம்பெறுவது தவிா்க்கப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், சிறுங்கட்டூா் முருகன், நாட்டேரி எம்.ஆறுமுகம், அகத்தேரிப்பட்டு டி.கிருஷ்ணன், மோட்டூா் சி.ஆா்.மண்ணு, அரியூா் எம்.அழகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.