அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் மாவட்ட மேலாளராகப் பணியாற்றி வந்த ககன்தீப் சிங் ரந்தாவா அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தன்னை சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டி காணொலி ஒன்றையும் அவர் பதிவு செய்திருந்தார்.
டெண்டர் விவகாரத்தில் ரந்தாவாவை அமைச்சர் வற்புறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், லால்ஜித் சிங் புல்லர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். அமைச்சர் புல்லரை ராஜிநாமா செய்யுமாறு முதல்வர் பகவந்த் மான் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
மேலும் அதிகாரி ரந்தாவா இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள தலைமைச் செயலர் கே.ஏ.பி. சின்ஹாவுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Summary
Bhullar allegedly pressured Randhawa to award a warehousing tender to a political aide; when he refused, he was reportedly summoned and physically assaulted at the minister’s residence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!

பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை! எம்.பி.க்கள் பரிந்துரைத்தால் சிபிஐ விசாரணை: அமித் ஷா

பஞ்சாப்: அரசு அதிகாரி தற்கொலை! பதவி விலகிய அமைச்சா் மீது வழக்குப்பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



