அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா
அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

லால்ஜித் சிங் புல்லர்
File photo | PTI

லால்ஜித் சிங் புல்லர்
File photo | PTI
அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் மாவட்ட மேலாளராகப் பணியாற்றி வந்த ககன்தீப் சிங் ரந்தாவா அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தன்னை சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டி காணொலி ஒன்றையும் அவர் பதிவு செய்திருந்தார்.
டெண்டர் விவகாரத்தில் ரந்தாவாவை அமைச்சர் வற்புறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், லால்ஜித் சிங் புல்லர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். அமைச்சர் புல்லரை ராஜிநாமா செய்யுமாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
மேலும் அதிகாரி ரந்தாவா இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள தலைமைச் செயலர் கே.ஏ.பி. சின்ஹாவுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...