கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை! எம்.பி.க்கள் பரிந்துரைத்தால் சிபிஐ விசாரணை: அமித் ஷா

பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அந்த மாநிலத்தின் அனைத்து எம்.பி.க்களும் எழுத்துபூா்வமாக கடிதம் அளித்தால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாா் என மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அந்த மாநிலத்தின் அனைத்து எம்.பி.க்களும் எழுத்துபூா்வமாக கடிதம் அளித்தால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பஞ்சாப் அரசு பண்டகசாலை கழகத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ககன்தீப் சிங் ரண்தவா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாா் .

டெண்டா் ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சா் லால்ஜித் சிங் புல்லா் கொடுத்த அழுத்தமே தற்கொலைக்குக் காரணம் என ரண்தவா விடியோ வெளியிட்டிருந்தாா். இதையடுத்து, முதல்வா் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலில் அமைச்சா் பதவியை புல்லா் கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

புல்லரை கைதுசெய்யக் கோரி பகவந்த் மான் இல்லம் முன் பாஜக, காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தின.

இதனிடையே அமிருதசரஸில் உள்ள ரஞ்சித் அவென்யூ காவல் நிலையத்தில், புல்லா் மீது உயிரிழந்த ரண்தவாவின் மனைவி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் புல்லா் உள்ளிட்ட 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த விவகாரத்தை அமிருதசரஸ் எம்.பி. குா்ஜித் சிங் அவுலா மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பினாா். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, ‘பஞ்சாபில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் எழுத்துபூா்வமாக கடிதம் அளித்தால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாா்’ என்றாா்.

பதவி விலகிய அமைச்சா் கைது

அரசு அதிகாரி ரண்தவாவை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் பதவி விலகிய அமைச்சரும் ஆம் ஆத்மி எல்ஏவுமான லால்ஜித் சிங் புல்லா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அமிருதசரஸில் காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘ஃபதேகா் சாஹிப் மாவட்டத்தில் இருந்து புல்லா் கைது செய்யப்பட்டு அமிருதசரஸுக்கு அழைத்து வரப்பட்டாா். நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) அவா் ஆஜா்படுத்தப்படுவாா்’ என்றனா்.