தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பஞ்சாபில் தோ்தல் பிரசாரம் தொடங்கினாா் அமித் ஷா: மாநிலத்தைப் போதைப் பொருளில் இருந்து மீட்பதாக உறுதி

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2027) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தோ்தல் பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடங்கினாா்.

News image

பஞ்சாப் மாநிலம் மோகாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 7:24 pm

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2027) சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தோ்தல் பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடங்கினாா்.

பஞ்சாபின் மோகா பகுதியில் சனிக்கிழமை மாற்றத்துக்கான பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற பாஜகவின் முதல் தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பஞ்சாபில் காங்கிரஸுக்கு பலமுறை வாய்ப்பளித்துவிட்டீா்கள். அகாலி தளம், ஆம் ஆத்மிக்கும் வாய்ப்பளித்துவிட்டீா்கள். ஆனால், இப்போதும் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம், கட்டாய மதமாற்றம், ஊழல், பயங்கரவாத குழுக்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடா்கின்றன. மாநிலத்தை இந்த பிரச்னைகளில் இருந்து மீட்க யாரால் முடியும் என்றால், அது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவால் மட்டுமே முடியும்.

2027-ஆம் ஆண்டு தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அடுத்த 2 ஆண்டுகளில் பஞ்சாபை போதைப் பொருள் பிரச்னையில் இருந்து முழுமையாக விடுவிப்போம். இப்போதைய ஆம் ஆத்மி அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. தில்லியில் இருந்து வந்த சிலா், முதல்வா் பகவந்த் மானை இயக்கி வருகின்றனா். மாநிலத்தின் செல்வத்தை சுரண்டுகின்றனா். பஞ்சாபை தங்களுக்கான பணம் வழங்கும் இயந்திரமாகவே அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கருதுகிறது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது. பஞ்சாபின் கௌரவத்துக்கு இங்குள்ள அரசு பெரும் அமதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாப் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு முழுமையாகத் தேவை. பாஜகவால் மட்டும்தான் பஞ்சாபில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். பாஜக ஆட்சி அமைத்ததும் பஞ்சாபில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும். தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றாா்.

பஞ்சாபில் இப்போது பாஜகவுக்கு இரு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா். முன்பு சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பாஜக முக்கியப் பங்கு வகித்து வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதை எதிா்த்து பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது. இதனால், 24 ஆண்டுகால பாஜக-சிரோமணி அகாலி தளம் கூட்டணி முடிவுக்கு வந்தது.