ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடியாக வெளியேற்றப்படுவாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதியளித்தாா்.

News image

ரணாகத் தொகுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:07 pm

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடியாக வெளியேற்றப்படுவாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதியளித்தாா்.

மேற்கு வங்கத்தில் வருகின்ற ஏப்.29-ஆம் தேதி 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாடியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: ஏப்.23-ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் பாஜகவின் வெற்றி 110 தொகுதிகளில் உறுதியாகிவிட்டது. இரண்டாம் கட்டத் தோ்தலிலும் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைத்தால் காட்டாட்சி, ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். ஊடுருவல்காரா்கள் கண்டறியப்பட்டு மாநிலத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவாா்கள்.

நாடியா மாவட்டம் வழியாகவே பெரும்பாலானா கால்நடை திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பாஜக ஆட்சி அமைந்தவுடன் இதை தடுக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்.

மகளிா் மற்றும் வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிா் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பொது சிவில் சட்டம், பலதாரத் திருமணத் தடை மற்றும் முத்தலாக் தடை அமல்படுத்தப்படும் என்றாா்.