இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

தேர்தல் வாக்கு முடிவுகள் நாளில் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்வது குறித்து...

News image

விஜய் ஆஸ்திரேலியா பயணமா? - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 10:57 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு முடிவுகள் நாளில் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்தது.

தேர்தல் முடிந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் குடும்பத்துடன் துபை சென்றுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் மே 4 ஆம் தேதியில் தவெக தலைவர் விஜய்யும் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

விஜய், படங்களில் நடித்தபோது, ஒவ்வொரு படப்பிடிப்பு முடிவின்போதும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளிலும் ஆஸ்திரேலியா செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

இருப்பினும், தேர்தலில் தோல்வியைத் தழுவினால் மட்டுமே ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாகவும், இல்லையெனில் பயணத்தை ரத்து செய்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆகையால், தேர்தல் முடிவுகளைப் பொருத்தே, விஜய்யின் ஆஸ்திரேலியா பயணம் முடிவாகும் என்று தெரிகிறது.

Summary

TN Polls 2026: Is TVK Vijay going to Australia on May 4th?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.