தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக

மேற்கு வங்கத்தில் பாஜக பிரசாரத்தில் மோடி உரை...

News image

பிரதமர் மோடி - DPS

Updated On :11 ஏப்ரல் 2026, 8:07 am

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் செயல்முறை விரைவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகப் பூர்வ பர்தமான் மாவட்டத்தில் உள்ள கத்வா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகவே பாஜக குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகதிகள் மத்தியில் அச்சத்தைப் பரப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாப்பின் கீழ் மத்துவா மற்றும் நாமசூத்திர அகதிகள் குடும்பங்கள் இருப்பதாகவும், அகதிகளுக்குக் குடியுரிமை கிடைப்பதற்காகவே மோடி குடியுரிமை சட்டத்தை இயற்றியதாக அவர் கூறினார்.

பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிஏஏ-வின் கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறை தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவுபடுத்தப்படும்.

தெற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் பரவியுள்ள மத்துவா சமூகம் செல்வாக்குமிக்க தேர்தல் வாக்கு வங்கியாகக் கருதப்படும். இந்த மாநிலத்தில், குடியுரிமை, அரசியல் ரீதியாகத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரதமரின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஊடுருவியவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்க வேண்டும், வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஊடுருவியவர்களுக்கு உதவியவர்கள் யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள். திரிணமூல் காங்கிரஸ்மீதான மறைமுகத் தாக்குதலாகவே இது பார்க்கப்படுகிறது.

முதல்வர் மமதா பானர்ஜியின் 15 ஆண்டுக்கால ஆட்சி வங்காளத்தில் அச்சச் சூழலை உருவாக்கியுள்ளதாகப் பிரதமர் குற்றம் சாட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்குத் தேர்தல்கள், ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.

Summary

Prime Minister Narendra Modi on Saturday sharpened the BJP's pitch on infiltration and welfare in poll-bound West Bengal and promised that the process of granting citizenship to Matua and Namasudra refugee families will speed up once the party comes to power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.