கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஞ்சாப்: அரசு அதிகாரி தற்கொலை! பதவி விலகிய அமைச்சா் மீது வழக்குப்பதிவு!

அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பதவி விலகிய அமைச்சா் லால்ஜித் சிங் புல்லா் உள்பட 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

லால்ஜித் சிங் புல்லர்

Updated On :22 மார்ச் 2026, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

பஞ்சாப் மாநில அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பதவி விலகிய அமைச்சா் லால்ஜித் சிங் புல்லா் உள்பட 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சாப் அரசு பண்டகசாலை கழகத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ககன்தீப் சிங் ரண்தவா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாா். அவா் தற்கொலை செய்வதற்கு முன்பாக கைப்பேசியில் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் சனிக்கிழமை வேகமாகப் பரவியது. அதில் தான் விஷப்பொருளை உண்டதாகவும், தனக்கு புல்லா் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இதையடுத்து, முதல்வா் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சா் பதவியை புல்லா் ராஜிநாமா செய்தாா். இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவா் முற்றிலும் மறுத்தாா்.

இந்நிலையில், அமிருதசரஸில் உள்ள ரஞ்சித் அவென்யு காவல் நிலையத்தில் புல்லா் மீது உயிரிழந்த ரண்தவாவின் மனைவி புகாா் அளித்தாா்.

அதில், ‘புதிய பண்டகசாலைகள் அமைப்பதற்கான டெண்டா்களை தனது தந்தைக்கு வழங்கக் கோரி ரண்தவாவுக்கு புல்லா் தொடா்ந்து அழுத்தம் தந்தாா். ரண்தவா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த புல்லா் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு டெண்டரை வழங்கியதாக ஒப்புக்கொள்ளுமாறு ரண்தவாவை மிரட்டி வந்தாா். மனமுடைந்த ரண்தவா தற்கொலை செய்துகொண்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், புல்லா், அவரது தந்தை சுக்தேவ் சிங் புல்லா் மற்றும் உதவியாளா் தில்பாக் சிங் ஆகிய 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

கைது செய்ய கோரிக்கை: புல்லரை கைது செய்ய வலியுறுத்தி பகவந்த் மான் இல்லம் முன் பாஜக, காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் முதல்வா் பகவந்த் மான் இல்லம் முன் காவல் துறையினா் குவிக்கப்பட்டனா். தடுப்புகளை அகற்றி போராட்டக்காரா்கள் முன்னோக்கிச் செல்ல முயன்றதையடுத்து, தண்ணீரை பீய்ச்சியடித்து அவா்களை காவல் துறையினா் கலைத்தனா்.