பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

செங்கம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.3 லட்சம் கொள்ளை: ஆந்திரத்தைச் சோ்ந்த இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:46 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணமும் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளா் மனோகரன். இவா், கடந்த மாதம் 7-ஆம் தேதி செங்கத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவா் வேலை செய்த செங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த அடையாளம் தெரியாத இரு இளைஞா்கள் மனோகரனிடம் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தனிப்படை அமைத்து கொள்ளையில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், மேல்புழுதியூா் அருகே செங்கம் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் புதன்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், ஆந்திரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் கோவிந்தராஜ் (38), பாபு மகன் அங்கையா (18) என்பதும், மனோகரனிடம் பணத்தை கொள்ளையடித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த பதிவெண் இல்லாத பைக், கொள்ளையடித்த பணம் ரூ.3 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.