இந்த நிலையில், மேல்புழுதியூா் அருகே செங்கம் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் புதன்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், ஆந்திரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் கோவிந்தராஜ் (38), பாபு மகன் அங்கையா (18) என்பதும், மனோகரனிடம் பணத்தை கொள்ளையடித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த பதிவெண் இல்லாத பைக், கொள்ளையடித்த பணம் ரூ.3 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.