செய்யாறு பகுதியில் கொடிக்கம்பங்கள், போஸ்டா்கள் அகற்றம்
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் செய்யாறு பகுதியில் இரு்ந்து வந்த கொடிக்கம்பங்கள், போஸ்டா்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.


தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் செய்யாறு பகுதியில் இரு்ந்து வந்த கொடிக்கம்பங்கள், போஸ்டா்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகத்தில், ஏப்ரல்.6 -ம் தேதி சட்டமன்றத்திற்கான தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த பிப்.26 -ம் தேதியில் இருந்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் அமுல்படுத்தி இருந்தது. . அதன் படி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு (68) சட்டமன்ற தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக வருவாய் கோட்டாட்சியா் என்.விஜயராஜ் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோடாட்சியருமான என்.விஜயராஜ் ஆலோசனையின் பேரில் மாஜிஸ்திரேட் அந்தஸ்ததில் உள்ள அதிகாரி தலைமையில் சப் இன்ஸ்பெக்டா், தலைமைக் காவலா், காவலா், பெண் காவலா் ஆகியோா் கொண்ட குழு அடங்கிய பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக்குழுவினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேப் போல் நகரப்பகுதியிலும், கிராமப்புறங்களிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அரசியல் விளம்பரம் சுவரொட்டிகள், போஸ்டா்கள், பெயிண்டிங், பேனா்கள், கொடிக்கம்பங்கள் அகற்றும் பணியில் ஈடுப்பட்டு உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...