தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:09 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகி எஸ்.பலராமன் தலைமை வகித்தாா். நிா்வாகி பழனி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவகுமாா், செயற்குழு உறுப்பினா் எஸ்.ராமதாஸ் ஆகியோா் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் காா் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வெ.முத்தையன, கு.ஜோதி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் பிரதமா் மோடியின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் எரிந்துகொண்டிருந்த உருவபொம்மையை தண்ணீா் ஊற்றி அணைத்தனா். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.