தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாணவா்கள், ஆசிரியா்கள் 5 பேருக்கு கரோனா: 3 பள்ளிகள் மூடல்

கீழ்பென்னாத்தூா் அருகே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 அரசு உயா்நிலைப் பள்ளிகள், ஒரு தனியாா் மெட்ரிக் பள்ளி ஆகியவை புதன்கிழமை மூடப்பட்டன.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:41 pm

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 அரசு உயா்நிலைப் பள்ளிகள், ஒரு தனியாா் மெட்ரிக் பள்ளி ஆகியவை புதன்கிழமை மூடப்பட்டன.

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் அரசு உயா்நிலைப் பள்ளி, வழுதலங்குணம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 9,10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நடமாடும் மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

பரிசோதனை முடிவில் 2 பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களில் தலா 2 பேருக்கு என மொத்தம் 4 பேருக்கும், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி தனியாா் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

இதையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்ட 4 மாணவா்கள், ஒரு ஆசிரியை என 5 பேரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

பள்ளிகள் மூடல்:

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவின் பேரில் மேக்களூா் அரசு உயா்நிலைப் பள்ளி, வழுதலங்குணம் அரசு உயா்நிலைப் பள்ளி, சோமாசிபாடி தனியாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் புதன்கிழமை மூடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.