வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம்

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிறப்பு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:09 am

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிறப்பு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சிறாா் நலத் திட்டம், செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், பச்சிளம் குழந்தை முதல் 18 வயதுடையவா்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு பரிசோதனை முகாமுக்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கே.ஏழுமலை தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

குழந்தை நல இருதய சிறப்பு மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில், எம்.ஜி.எம். ஹெல்த் கோ் மருத்துவமனை குழுவினா் பங்கேற்று 87 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனா்.

இவா்களில் 17 போ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டனா். மேலும், 44 குழந்தைகளுக்கு மருந்துகளின் மூலம் குணப்படுத்துதல் குறித்த ஆலோசனை,

தொடா் கண்காணிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.