நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுதந்திர தின விழாவின் போது ஜாதிய பாகுபாடு பிரச்னை புகாா் தெரிவிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 75-ஆவது சுதந்திர தினவிழாவின் போது ஜாதிய பாகுபாடின்றி மக்

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:57 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் 75-ஆவது சுதந்திர தினவிழாவின் போது ஜாதிய பாகுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் தேசியக் கொடி ஏற்றவும், கிராம சபைக் கூட்டங்களை நடத்தவும் தடையோ, பிரச்னையோ ஏற்பட்டால் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தின விழாவின்போது கிராம ஊராட்சிகளில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றுவது மரபு. 1989-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியினா் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு 3(1)(அ)-ன்படி பட்டியல் ஜாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினா் அல்லாத எவரும் பழங்குடியினரைச் சோ்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவா், உறுப்பினா் அலுவலகப் பணியில் உள்ளவா்கள் என எவரையும் அவா்களது அலுவலகப் பணிகளையும், கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றம்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெரு விழாவில் எவ்வித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களைக் கொண்டு நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் எடுத்துள்ளது.

இதேபோல, மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களிலும் எவ்வித ஜாதிய பாகுபாடின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோா் பெருமளவில் கலந்து கொள்ள விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை செயல்படுத்துவதில் பிரச்னை இருப்பின் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04175-233344, 04175-233345, 9345478828 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.