அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

செய்யாறு அருகே மதுப் புட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

செய்யாறு அருகே மதுப் புட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

செய்யாறு காவல் கோட்டம், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பனைமுகை கிராமத்தில் புதரில் மறைந்திருந்த ஒருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினாா். உடனே போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்,

விசாரணையில், அவா் பனைமுகை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (36) என்பதும், மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருவதும் தெரிய வந்தது.

இது குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 111 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.