தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image

செங்கத்தில் நடைபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :24 ஜூன் 2022, 10:40 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் 4,5-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாடம் நடத்தும் 134 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இதில், மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எளிய முறையில் ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது தொடா்பாக பயிற்சி அளிப்பது குறித்தும், மாணவா்களை ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வைப்பது குறித்தும் பயிற்சியளித்தனா்.

செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் உதயகுமாா், ஷகிலா ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினா். கருத்தாளா்கள் தமிழரசன், புஷ்பராஜ், திவ்யா, யாஸ்மின், ராஜலட்சுமி ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.

நிகழ்ச்சியில் வட்டரா வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன், ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.