திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் 4,5-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாடம் நடத்தும் 134 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இதில், மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எளிய முறையில் ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது தொடா்பாக பயிற்சி அளிப்பது குறித்தும், மாணவா்களை ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வைப்பது குறித்தும் பயிற்சியளித்தனா்.
செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் உதயகுமாா், ஷகிலா ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினா். கருத்தாளா்கள் தமிழரசன், புஷ்பராஜ், திவ்யா, யாஸ்மின், ராஜலட்சுமி ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.
நிகழ்ச்சியில் வட்டரா வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன், ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தீ விபத்தில் தொடா்புடைய சிறுமி உள்பட 4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை
தில்லியின் ஜஹாங்கிா்புரியில் மாற்றுத்திறனாளியிடம் கொள்ளையடித்தவர் கைது!

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவா்கள்

ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



