ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image

செங்கத்தில் நடைபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :24 ஜூன் 2022, 10:40 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் 4,5-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாடம் நடத்தும் 134 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இதில், மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எளிய முறையில் ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது தொடா்பாக பயிற்சி அளிப்பது குறித்தும், மாணவா்களை ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வைப்பது குறித்தும் பயிற்சியளித்தனா்.

செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் உதயகுமாா், ஷகிலா ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினா். கருத்தாளா்கள் தமிழரசன், புஷ்பராஜ், திவ்யா, யாஸ்மின், ராஜலட்சுமி ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.

நிகழ்ச்சியில் வட்டரா வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன், ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.