அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் கண்காணிப்பு மையம் திறப்பு
By DIN | Published On : 14th April 2022 10:38 PM | Last Updated : 14th April 2022 10:38 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.78 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய 32 தீவிர சிகிச்சை படுக்கைகளும், ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.1.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அதேவேளையில், மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.திருமால்பாபு, கண்காணிப்பாளா் ஷகில் அகமது, துணை கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G