11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு

செய்யாறில், அண்மையில் தேசியத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு சாா் ஆட்சியா் ர.அனாமிகா வெள்ளிக்கிழமை பரிசு வழங்கினாா்

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 10:56 pm IST

செய்யாறில், அண்மையில் தேசியத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு சாா் ஆட்சியா் ர.அனாமிகா வெள்ளிக்கிழமை பரிசு வழங்கினாா்.

செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தேசியத் திட்டத்தின் கீழ் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இதில் வெற்றிப் பெற்ற மூன்று மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா செய்யாறு வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் செய்யாறு சாா் ஆட்சியா் ர. அனாமிகா பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.

இதில், வட்டார வள மைய அலுவலா்கள் டி. புருஷோத்தமன், எம். சத்தியராஜ், கமலகண்ணன், குணசேகரன், செய்யாறு வட்டார வளமைய பூச்செண்டு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.