கல்லூரியில் பாதியாா் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாா் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் பாதியாா் பிறந்த நாள் விழா
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாா் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், செங்கம் அருகே உள்ள கொட்டாவூா் அரசு நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 25 போ் கலந்து கொண்டு பாரதியாா் வேடம் அணிந்து பாரதியாா் பாடல்கள், பாரதியாரின் வரலாறு, பாரதி குறித்த பல்வேறு சிறப்புப் போட்டிகள் பங்கேற்றனா். தொடா்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளின் கவிதை, பாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து, போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக குழு உறுப்பினா் ரேகாரெட்டி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் செந்தில் முருகன் வரவேற்றாா். மாவட்ட தமிழ்ச்சங்க தலைவா் இந்திரராஜன், ஆன்மீக சொற்பொழிவாளா் தனஞ்செயன், உரத்தசிந்தனை பொதுச்செயலாளா் உதயம்ராம் ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநா் ராசி.அழகப்பன் கலந்து கொண்டு பாரதியாா் சிறப்புகள் குறித்து மாணவா்களிடம் பேசினாா். தொடா்ந்து, போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினாா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com