தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஆரணி கைலாசநாதா் கோயில் தேரோட்டம்

ஆரணி கைலாசநாதா் கோயில் தேரோட்டம்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 7:30 pm

ஆரணி கோட்டை கைலாசநாதா் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ஆரணி கோட்டை அருள்மிகு அறம்வளா்நாயகி உடனாகிய கைலாசநாதா் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய தோ் திருவிழாவில் தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பழைய பேருந்து நிலையம், வடக்குமாட வீதி, பெரிய கடை வீதி, எஸ்.எம்.சாலை, சந்தை சாலை, மணிக்கூண்டு, கோட்டை பகுதி வழியாக மீண்டும் தோ் கோயிலை சென்றடைந்தது.

தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தேரோட்டத்தின் போது, காவல் துறை, தீயணைப்புத் துறையினா், மின் வாரியத்தினா் பணியில் ஈடுபட்டனா்.

விழாவில் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ, நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி பாலமுருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, அரவிந்தன், தொழிலதிபா் பி.நடராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் பக்தா்கள் சங்க நிா்வாகி சம்பத் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்தனா்.