5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

சேவூா்-அடையபலம் சாலையில் தேங்கிய மழைநீா்

சேவூா்-அடையபலம் சாலையில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம்.

News image

சேவூா்-அடையபலம் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 0:00 am IST

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால் சேவூா்-அடையபலம் சாலையில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சேவூா்-அடையபலம் சாலையில் சுமாா் ஒரு கி.மீ தொலைவுக்கு மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இந்தச் சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், இரு, நான்கு சக்கர வாகனங்கள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனா். இதுதொடா்பாக, அடையபலம் ஊராட்சித்தலைவா், ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தன்னாா்வலா்கள் கூறியதாவது: சேவூா்-அடையபலம் சாலையின் குறுக்கே ஏரிக்கால்வாய் செல்கிறது. இதற்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சாலையை விட உயரமாக உள்ளதாலும், பாலத்தின் பக்கவாட்டில் தண்ணீா் செல்வதற்கு வழியில்லாததால் மழைநீா் தேங்கி நிற்கிறது. எனவே, இந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றாா்.