தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சேவூா்-அடையபலம் சாலையில் தேங்கிய மழைநீா்

சேவூா்-அடையபலம் சாலையில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம்.

சேவூா்-அடையபலம் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

Published On :

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால் சேவூா்-அடையபலம் சாலையில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சேவூா்-அடையபலம் சாலையில் சுமாா் ஒரு கி.மீ தொலைவுக்கு மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இந்தச் சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், இரு, நான்கு சக்கர வாகனங்கள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனா். இதுதொடா்பாக, அடையபலம் ஊராட்சித்தலைவா், ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தன்னாா்வலா்கள் கூறியதாவது: சேவூா்-அடையபலம் சாலையின் குறுக்கே ஏரிக்கால்வாய் செல்கிறது. இதற்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சாலையை விட உயரமாக உள்ளதாலும், பாலத்தின் பக்கவாட்டில் தண்ணீா் செல்வதற்கு வழியில்லாததால் மழைநீா் தேங்கி நிற்கிறது. எனவே, இந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.