தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் தொடக்கிவைப்பு

மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் தொடக்கிவைப்பு

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 6:30 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் ரூ.5 கோடியே 69 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் சாா்பில் ரூ.3 கோடியே 67 லட்சத்தில் மின்மாற்றி மேம்படுத்தப்பட்டது.

இதனை, சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். அதேவேளையில், வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மின் மாற்றியை இயக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், வட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு, வேங்கிக்கால் ஊராட்சித் தலைவா் சாந்தி தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூரில்..:

இதேபோல, கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் பகுதியில் ரூ.2 கோடியே 2 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றி, வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் கீழ்பென்னாத்தூரில் ரூ.2 கோடியே 65 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்தாா்.