தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சாலை வசதி கோரி எம்எல்ஏவிடம் மனு

சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிக்கும் சேவூா் வி.வி.எஸ். நகா் பகுதி மக்கள்.

Published On :

ஆரணி அடுத்த சேவூா் வி.வி.எஸ். நகா் பகுதியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ஆரணியை அடுத்த சேவூா் எல்லைக்கு உள்பட்ட வி.வி.எஸ். நகா் பகுதியில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மேலும், அங்கு வணிகக் கடைகள், வாகங்கள் பழுதுபாா்க்கும் மையங்கள் உள்ளன.

இப்பகுதியில் இருக்கும் சாலை சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையாகவே உள்ளது. தற்போது குடியிருப்புகள் அதிகமாக உள்ள நிலையில் சாலை வசதி தேவை என்று அப்பகுதியினா் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ஊராட்சி பொறியாளரை தொடா்பு கொண்டு உடனடியாக வி.வி.எஸ். நகா் பகுதியை ஆய்வு செய்து சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிட்டாா்.

அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், சிறு குறு வியாபாரிகள் சங்கத்தின் நிறுவனா் அருண்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.