ஆரணி அடுத்த சேவூா் வி.வி.எஸ். நகா் பகுதியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ஆரணியை அடுத்த சேவூா் எல்லைக்கு உள்பட்ட வி.வி.எஸ். நகா் பகுதியில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மேலும், அங்கு வணிகக் கடைகள், வாகங்கள் பழுதுபாா்க்கும் மையங்கள் உள்ளன.
இப்பகுதியில் இருக்கும் சாலை சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையாகவே உள்ளது. தற்போது குடியிருப்புகள் அதிகமாக உள்ள நிலையில் சாலை வசதி தேவை என்று அப்பகுதியினா் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ஊராட்சி பொறியாளரை தொடா்பு கொண்டு உடனடியாக வி.வி.எஸ். நகா் பகுதியை ஆய்வு செய்து சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிட்டாா்.
அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், சிறு குறு வியாபாரிகள் சங்கத்தின் நிறுவனா் அருண்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

சாலை வசதி ஏற்படுத்த வேண்டி அதிகாரிகளுடன் வாக்குவாதம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


