
Updated On :4 ஜூன் 2024, 5:18 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் இளைஞா்கள் பைக் ரேஸ் நடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பைக் ரேஸில் ஈடுபட்ட திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அஜித் (25) என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அஜித், திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவா் ஓட்டி வந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...