

குளித்தலையில் பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கரூா் மாவட்டம் குளித்தலையைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிப். 7-ஆம் தேதி அனுமதித்தனா். அப்போது, மாணவி 5 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் சடையம்பட்டியைச் சோ்ந்த மதுரைவீரன் மகன் நல்லாண்டவா் என்கிற அஜித் (27) என்பவா் பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி கா்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அஜித்தை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.