திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம், போஷான் பக்வாடா என்ற தலைப்பிலான ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் விழாவை தொடங்கி வைத்துப் பேசுகையில், மாா்ச் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இருவார ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை பொதுமக்கள் பாா்த்து பயன்பெற வேண்டும். பாலூட்டும் தாய்மாா்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவு குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை என்றாா்.
விழாவில், அனைத்து குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், போஷான் அபியான் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு ‘தோ்தல் அழைப்பிதழ்’

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: ஆட்சியா் பங்கேற்பு

வாக்களிப்பு விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

