யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வாக்களிப்பு விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா் பங்கேற்றனா்.

News image

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரான்ஸ் நாட்டவா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வின்போது அலங்கரிக்கப்பட்ட வளைவுகள், தற்படம் எடுக்கும் சுழலும் இயந்திரத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் குழுமியிருந்தனா்.

அப்போது அங்கு வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வரவேற்று, ரோஜா மலா்கள் கொடுத்து இந்தியத் தோ்தல் குறித்து விளக்க உரையாற்றினாா். இதில் நெகிழ்ந்த பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் அவருக்கு நன்றி கூறி புறப்பட்டனா்.

 வெளிநாட்டவருக்கு விளக்க உரையாற்றிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

வெளிநாட்டவருக்கு விளக்க உரையாற்றிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.