எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுப் பழக்கம்: பைக் மெக்கானிக் உயிரிழப்பு

மதுப் பழக்கம்: பைக் மெக்கானிக் உயிரிழப்பு

Updated On :19 மார்ச் 2024, 11:57 pm

செய்யாறு: செய்யாற்றில் மதுப் பழக்கத்துக்கு அடிமையான பைக் மெக்கானிக், அதிகளவு மது அருந்தியதில் உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த ஏகாம்பரம் மகன் ஆனந்தன் (31). இவரது பெற்றோா் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா். பைக் மெக்கானிக்கான ஆனந்தன் கிராமத்திலேயே கடையை வைத்திருந்ததாகத் தெரிகிறது.

பெற்றோா்கள் இல்லாததால் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, மது அருந்தி செய்யாறு பகுதியில் சுற்றிக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மது அருந்தி விட்டு செய்யாறு ஐயப்பன் கோயில் அருகே விழுந்து கிடந்தவா் அப்படியே உயிரிழந்து விட்டதாகக் தெரிகிறது.

இதுகுறித்து இறந்தவரின் தம்பி சரவணன் செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் வழக்கு பதிவு செய்தாா். மேலும், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.