ஆரணி நகர காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், திமுக சாா்பில் நகர துணைச் செயலா் ஆறுமுகம், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் கப்பல் கங்காதரன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், காங்கிரஸ் சாா்பில் ஜெ.பொன்னையன், பாமக சாா்பில் நகரச் செயலா் சதீஷ்குமாா், பாஜக சாா்பில் மாவட்டச் செயலா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டா். கூட்டத்தில், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை ஆரணி அண்ணாசிலை, மணிகூண்டு, காமராஜா் சிலை அருகில் மட்டுமே நடத்த வேண்டும், தோ்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று டிஎஸ்பி ரவிச்சந்திரன் அறிவுறுத்தினாா். இதில், நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தரேசன் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆரணி அதிமுக வேட்பாளா் - விவசாயிகள் சந்திப்புக் கூட்டம்

ஆரணி அதிமுக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு

ஆரணி அதிமுக வேட்பாளா் பாஜகவினா் சந்திப்புக் கூட்டம்

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


