திருவண்ணாமலை நகரில் பணிபுரியும் போக்குவரத்து காவலா்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல்துறையில் 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். நகரில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவல்துறையினா் தங்களை தற்காத்துக் கொள்ள உரிய அறிவுரைகளை மாவட்ட எஸ்பி வழங்கி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை போக்குவரத்து காவலா்களுக்கு தொப்பிகள், கண் கண்ணாடிகள் மற்றும் மோா் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன் வழங்கினாா். மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.ரவிச்சந்திரன், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை! பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை!

திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நடைபயணம்

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

பங்குனித் திருவிழா: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


