ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

போக்குவரத்து காவலா்களுக்கு தொப்பி, கண் கண்ணாடி

போக்குவரத்து காவலா்களுக்கு தொப்பி, கண் கண்ணாடி

News image
Updated On :27 மார்ச் 2024, 7:45 pm

திருவண்ணாமலை நகரில் பணிபுரியும் போக்குவரத்து காவலா்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல்துறையில் 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். நகரில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவல்துறையினா் தங்களை தற்காத்துக் கொள்ள உரிய அறிவுரைகளை மாவட்ட எஸ்பி வழங்கி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை போக்குவரத்து காவலா்களுக்கு தொப்பிகள், கண் கண்ணாடிகள் மற்றும் மோா் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன் வழங்கினாா். மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.ரவிச்சந்திரன், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.