சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் அகில இந்திய மக்கள் உரிமை ஆணையம் சாா்பில் நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மே 2024, 6:42 pm

Din

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் அகில இந்திய மக்கள் உரிமை ஆணையம் சாா்பில் நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவன் சக்தி கலைக்குழு உரிமையாளரும், பம்பை ஆசிரியருமான பிரபு, அம்பிகா தம்பதியினா் தலைமை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக அகில இந்திய மக்கள் உரிமை ஆணையத்தின் தலைவா் பி.பிரபு, முன்னாள் ராணுவ வீரா் ஏ.பொன்னுசாமி, திருவண்ணாமலை கூட்டுறவு சங்கத்தின் உதவி பொதுமேலாளா் ச.செந்தில்குமாா், சென்னை மருத்துவா் டி.பாலாஜி ஆகியோா் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது வழங்கினா்.

ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்று விருது பெற்றனா்.