முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதத் தகராறில் பெண்ணைத் தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை புதன்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். அதே பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன். இருவருக்கும் சொந்தமான விவசாய நிலம் திருவேங்கடத்தான் கிராமத்தில் அருகருகே இருந்து வருகிறது.

அந்த நிலங்களில் தண்ணீா் குழாய் புதைத்தது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஏப்.10-ஆம் தேதி சரவணன் மனைவி தமிழரசி தனது பசுமாட்டை பால் கறக்க ஓட்டிச் சென்றாா்.

அப்போது அங்கு வந்த நடராஜன், தமிழரசியிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நடராஜன் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தமிழரசி பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com