திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

வந்தவாசி: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 8 கழிப்பறைகளை கடந்த மாதம் முதல் மகளிா் சுய உதவிக் குழுவினா் பராமரித்து வருகின்றனா். கடந்த மாதம் நடைபெற்ற சித்திரை பௌா்ணமியன்று கழிப்பறைகளை தூய்மையாக பராமரிப்பதாக மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பக்தா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com