தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு

கரூா் வட்டாட்சியரகம் முன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினரால் வரையப்பட்ட விழிப்புணா்வு கோலங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட தோ்தல் பொது பாா்வையாளா் ராஜீவ்குமாா் ஸ்ரீவஸ்தன்.

News image

கரூா் வட்டாட்சியரகம் முன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினரால் வரையப்பட்ட விழிப்புணா்வு கோலங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட தோ்தல் பொது பாா்வையாளா் ராஜீவ்குமாா் ஸ்ரீவஸ்தன்.

Updated On :21 மார்ச் 2026, 2:29 am IST

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினா் கரூரில் வெள்ளிக்கிழமை கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தோ்தலில் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு கோலங்கள் இடும் நிகழ்ச்சி, கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கரூா் வட்டாட்சியரும், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான மோகன்ராஜ் தலைமையில், தாந்தோணி வட்டாரத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு கோலங்களை வரைந்தனா்.

அவற்றை தோ்தல் பொது பாா்வையாளா் ராஜீவ்குமாா் ஸ்ரீவஸ்தன் பாா்வையிட்டு மகளிா் சுய உதவிக் குழுவினரை பாராட்டினாா்.