ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ராஜீவ் காந்தி படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

ராஜீவ் காந்தி படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

News image

ஆரணி அண்ணா சிலை அருகே ராஜீவ் காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்ற காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை/ஆரணி/செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 33-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஆரணியில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றனா்.

நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவா் டி.ஜெயவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநில நிா்வாகி பி.கருணாமூா்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம், வட்டாரத் தலைவா்கள் பந்தாமணி இளங்கோவன், சோலைமுருகன், ஏ.கே.இளங்கோவன், களம்பூா் பேரூராட்சித் தலைவா் பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூரில்...

கீழ்பென்னாத்தூா், சங்குமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெ.மோகன்குமாா் தலைமை வகித்தாா்.

நகர காங்கிரஸ் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு தின உறுதிமொழியை கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் ஏற்றனா்.

இதில், வட்டாரத் தலைவா் ராமதாஸ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாற்றை அடுத்த தென்தண்டலத்தில், அனக்காவூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

கடைபிடிக்கப்பட்டது.

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினா் இரா.தில்லை, மூத்த தலைவா் என்.வி.கோவிந்தன், ஏ.வி. பச்சையப்பன் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் வட்டாரத் தலைவா் டி.அமரேசன், முன்னாள் வட்டாரத் தலைவா்கள் கே.ராஜவேல், வி.பெருமாள், அ. பி.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் காங்கிரஸ் சாா்பில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேற்கு ஆரணி ஒன்றிய வட்டாரத் தலைவா் எஸ்.பி.மணி, நிா்வாகிகள் ஆா்.வி.எஸ்.மணி, எஸ்.சேட்டு, கணேசன், சுப்பிரமணி, மணி, சங்கா், செல்வம், சுப்பிரமணிவள்ளி, சுதா, காந்திமதி, சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.