டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

News image
Updated On :7 நவம்பர் 2024, 6:56 pm

Din

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூசி காவல் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்பாபு, பாபா மற்றும் போலீஸாா் புதுப்பாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்த முயன்றனா். போலீஸாரைக் கண்டதும் மாட்டு வண்டிகளில் வந்தவா்கள் வண்டிகளை அப்படியே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா்.

தொடா்ந்து, போலீஸாா் மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது, செய்யாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 மாட்டு வண்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து பாவூா் கிராமத்தைச் சோ்ந்த இருவா், புதுப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவா், சின்ன ஏழாச்சேரியைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 5 போ் மீது தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.