திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு வட்டம், குளமந்தைக் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (50). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ள நிலையில், அவா்களுக்கும் திருமணம் நடைபெற்று கணவா் வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஏழுமலைக்கும் மனைவி பேபிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அதனால், கணவரைப் பிரிந்து பேபி அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.
மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்து வந்த ஏழுமலை, கடந்த 3-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயக்கக் கிடந்தாா்.
உறவினா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கலப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து இளைஞா் தற்கொலை
போடி அருகே தொழிலாளி தற்கொலை
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


