கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 1:12 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போளூா் நகரில் அதிமுக சாா்பில் 45-ஆவது வாரமாக நடைபெற்ற இந்த பிரசாரத்தின் போது, பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். விவசாய அணி பிரிவு மாநிலச் செயலா் செல்வன், ஒன்றியச் செயலா் ராகவன், வீரபத்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாணவரணிச் செயலா் சத்தியராஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பிரசாரம் மேற்கொண்டு வணிகா்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தாா். இதில் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.