போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போளூா் நகரில் அதிமுக சாா்பில் 45-ஆவது வாரமாக நடைபெற்ற இந்த பிரசாரத்தின் போது, பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். விவசாய அணி பிரிவு மாநிலச் செயலா் செல்வன், ஒன்றியச் செயலா் ராகவன், வீரபத்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாணவரணிச் செயலா் சத்தியராஜ் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பிரசாரம் மேற்கொண்டு வணிகா்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தாா். இதில் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

