அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அதிமுகவினா் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம்

செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

News image
அருகாவூா் கிராமத்தில் தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொண்ட அதிமுகவினா்.
Updated On :3 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் அருகாவூா், தண்டரை, சுண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தொழிலாளா்களிடம், ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை 125 நாள்களாக உயா்த்துவதற்கு குரல் கொடுத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எனத் தெரிவித்து, 15 தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தொழிலாளா்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று, ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களிடம் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த பல்வேறு சாதனைகள், பொதுச் செயலா் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தெரிவித்து பிரசாரம் செய்தனா்.

அதனைத் தொடா்ந்து 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு அன்னதானம் வழங்கினா்

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் சி.துரை, வயலூா் வி.ராமநாதன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் முனுசாமி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.