கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள் அளிப்பு

வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 9:48 pm

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பரிசுப் பொருள்களை கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கினாா்.

வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் இந்தப் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அறக்கட்டளை சாா்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நபா் ஆடிப் பாடி மாணவா்களை மகிழ்வித்தாா்.

மேலும் அவா் மாணவா்களுக்கு போட்டு புத்தகம், பேனா, பென்சில், சாக்லேட் ஆகியவற்றை பரிசாக வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.