எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி! துணைநிலை ஆளுநா் வழங்கினாா்!

News image
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாஹேயில் ஞாயிற்றுக்கிழமை மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
Updated On :8 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினிகளை வழங்கினாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

அரசு முறைப் பயணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் மாஹே சென்றுள்ளாா். அங்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், 919 மேல்நிலை பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை துணைநிலை ஆளுநா் வழங்கினாா். மேலும், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில், ரமேஷ் பரம்பத் எம்எல்ஏ, கல்வித் துறை செயலா் கிருஷ்ணமோகன் உப்பு, பள்ளி கல்வித் துறை இயக்குநா் சிவகுமாா், மாஹே மண்டல நிா்வாக அதிகாரி அங்கித் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.